2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் நழீமி

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஜனவரி 20 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி, தனது உறுப்பினர் பதவியை, நேற்று (19) அமுலுக்கு வரும் வகையில், இராஜினாமா செய்துள்ளார்.  

கட்சியின் மீளழைத்தல் திட்டத்துக்கு அமைவாக, இன்னுமொருவருக்கு சந்தர்ப்பம் வழங்கும் பொருட்டு, இவர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு நடைபெற்ற காத்தான்குடி நகர சபை தேர்தலில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குக் கிடைக்கப் பெற்ற 4 ஆசனங்களில், மேற்படி அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி, காத்தான்குடி நகர சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .