2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உள்ளூர் உற்பத்திப் பொருள்களுக்கான விற்பனைக் கண்காட்சி

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பில், மட்டு. முயற்சியான்மை உள்ளூர் உற்பத்திப் பொருள்களுக்கான விற்பனைக் கண்காட்சி, மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமாரால் இன்று (18)  திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் கல்லடி, உப்போடை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படும் இந்த விற்பனைக் கண்காட்சி, நாளை மறுதினம் (20) மாலை வரை நடைபெறவுள்ளது.

கண்காட்சியின் இன்றைய ஆரம்ப வைபவத்தில், மாவட்டச் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நகுலேஸ்வரன், சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கண்காட்சியில், மட்டக்களப்பு உற்பத்திப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .