2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில், ஊடகவியலாளர் ஒருவருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை, நேற்று (27) கைதுசெய்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பிராந்திய ஊடகவியலாளரும் காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளருமான எம்.எஸ்.முகம்மட் சஜீ என்பவருக்கு, நேற்று முன்தினம் (26) காலை அவரது வீட்டுக்குள் புகுந்த ஒருவர், அவரது உறவினர்களிடத்தில் கத்தியைக் காட்டி, "சஜீயைக் கத்தியால் குத்திக் கொலை செய்வேன்" என்றுக்கூறி கொலை அச்சுறுத்தல் விடுத்தாரென, ஊடகவியலாளர் முகம்மட் சஜீ, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த காத்தான்குடி பொலிஸார், காத்தான்குடி- 06 குறிச்சி பரீனாஸ் வீதியில் வசிக்கும் சந்தேகநபரைக் கைதுசெய்ததுடன், சந்தேக நபரை, நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .