2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஊழலை மறைக்கவே, கூட்டமைப்பு ‘ரணிலுக்கு ஆதரவு வழங்குகிறது’

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 நவம்பர் 29 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கிப் பிணைமுறி ஊழல் குற்றச்சாட்டுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்புபட்டுள்ளனர் எனக் குற்றஞ்சாட்டிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் வீ.கமலதாஸ், அந்த ஊழலை மறைக்கவே, கூட்டமைப்பினர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், பிரதமர் மஹிந்த ராஜப க்‌ஷ ஆட்சிக்கு வந்தால் அவைகள் தோண்டப்படுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுவதாகத் தெரிவித்தா​ர்.

எனவே, இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிமசிங்கவைக் காப்பாற்ற, கூட்டமைப்புத் துடியாய் துடிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பாரிய ஊழல் நிறைந்த பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றுகின்ற கட்சியாகுமென்றும் இதனை மக்கள் நிராகரிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .