2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஊழியர்கள் தற்காலிக இடைநிறுத்தம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜூலை 03 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி, நகர சபையில் தற்காலிக ஊழியர்களாகக் கடமையாற்றிய 62 பேரை, 01.07.2018ஆம் திகதியிலிருந்து வேலையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எ அஸ்பர் தெரிவித்தார்.

இந்த ஊழியர்களுக்காக கிழக்கு மாகாண ஆளுனரால் வழங்கப்பட்ட அனுமதி 30.6.2018ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.

மீண்டும் இவர்களை வேலைக்கமர்த்துவதற்கான அனுமதி கிடைக்கும் வரைக்கும் இவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தேவையேற்படின், அதில் சில ஊழியர்களை கடமைக் கேற்ப சேர்த்துக் கொள்வதற்கு நகர சபைத் தவிசாளருக்கு சபை உறுப்பினர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .