2024 மார்ச் 28, வியாழக்கிழமை

எதிர்காலச் சந்ததியினர் ’அடிமைகளாகும் துர்பாக்கியம்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் நம்பி வாக்களித்த அரசியல் தலைவர்களினால், தமது எதிர்காலச் சந்ததியினர் அனைவரும் அடிமைகளாக்கப்படும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதென, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - கல்லடி, திருச்செந்தூர் சிரேஷ்ட பிரைஜைகள் சபையால், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதியோர் நலன் திட்டத்தில் கீழ், முதியோருக்கு உலருணவு வழங்கும் நிகழ்வு, நேற்று (05) நடைபெற்றது, இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், எதிர்காலத்தில் எமது சந்ததியினர் அனைவரும், அடிமைகளாக நிற்கவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படுமென்றும் இதற்கெல்லாம் காரணம், நீங்கள் நம்பி வாக்களித்த சில அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் தானெனச் சுட்டிக்காட்டினார்.

இனிமேலும் எம்மக்களை ஏமாற்ற முடியாதென்றும் எவ்வளவோ படுகொலை நடந்திருக்கின்றன, இதற்கெல்லாம் நீதிமன்றத்துக்குச் செல்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள், ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்ற, இன்று நீதிமன்றத்தை நாடியுள்ள கேவலமான செயற்பாடுகள் தற்போது அரங்கேற்றப்பட்டுள்ளன என்றும் குற்றஞ்சாட்டினார்.

உண்மையில், பெரும்பான்மை இனத்தவர்களுக்கு, தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்னவென்று தெரியாதிருப்பதால், எங்களுடைய தமிழ்த் தலைவர்கள், தென்பகுதிக்குச் சென்று, அவ்விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டுமென, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X