2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘எதிர்பார்ப்பின் இளைஞர் முகாம்’

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர், யுவதிகளுக்கான இளைஞர் முகாமில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, நேற்று (20) மாலை நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் “எதிர்பார்ப்பின் இளைஞர் முகாம்” என்ற தொனிப்பொருளில், பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் மூன்று நாள்கள் நடைபெற்றன.

இதன்போது இளைஞர், யுவதிகளின் ஆளுமையையும், மனப்பாங்கையும் விருத்தி செய்தும் வகையில், பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் அ.தயாசீலன் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இறுதி நிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் கலந்துகொண்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X