2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிலிலுள்ள தாளங்குடா, வேடர்குடியிருப்புப் பிரதேசத்தில், எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம், இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, தாளங்குட கடற்கரை பகுதியை அண்டிய வேடர்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள காணியொன்றில் முற்றாக எரிந்த நிலையில், மண்டை ஓடு, எலும்புக்கூடு கொண்ட மேற்படி சடலத்தைப் பொலிசார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட  சடலம்,  60 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவருடதெனத் தெரிவித்த பொலிஸார், அவர் யார் என இதுவரை அடையாளங் காணப்படவில்லையென்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .