2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எருமை மாடு திருட்டு; இருவர் கைது

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரான் புலியாந்தகல் பிரதேசத்தில் இருந்து எருமை மாடு திருடி வெட்டப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியில் கொண்டுவரப்பட்ட போது, இருவரைக் கைதுசெய்தாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இரவு நேரங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதை தடுக்கும் வகையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனடிப்படையில், நேற்றிரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினரே, குறித்த முச்சக்கர வண்டியைக் கைப்பற்றி, இருவரைக் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .