2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் வீட்டிலிருந்து குண்டு, தோட்டாக்கள் மீட்பு

Editorial   / 2019 ஜூலை 09 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏறாவூரில் முகாந்திரம் வீதியில் உள்ள வீடொன்றின் கூரையின் நீர்தாங்கியொன்றினுள் இருந்து கைக்குண்டு மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்  பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் பொலிஸார்,விசேட அதிரடிப்படை  மற்றும்  இராணுவத்தினர் நேற்றுக் காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போதே, கூரையின் நீர்த்தாங்கியில் இருந்து 2 கைக்குண்டு, மற்றும் 63 தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட கைக்குண்டை ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் விசேடஅதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .