2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ.தே.க கைப்பற்றும் முதலாவது சபையாக கோறளைப்பற்று இருக்கும்

Editorial   / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷாரா

 

“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியால் கைப்பற்றப்படும் முதலாவது சபையாக கோறளைப்பற்று இருக்கும்” என, கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி நம்பிக்கை வெளியிட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேசசபைக்கான கட்டுப்பணத்தை நேற்று (11) செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச சபையைக் கைப்பற்றும் நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் எந்தகாலத்திலும் இல்லாத அளவுக்கு வேட்பாளர்கள் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர்.

“மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களையும் இணைத்து இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளோம். அகில, இங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஓர் கூட்டமைப்பை உருவாக்கி, அம்பாறை மாவட்டத்திலும் இலங்கையின் வேறு பாகங்களிலும் போட்டியிடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.

“தேர்தல் கூட்டு என்பது கட்சிகளிடையே கொள்கையுடன் ஒத்துப்போகும் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்பு கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .