2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் பெண் சகோதரிகள் இருவர் கைது

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஜூலை 30 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை, பொலிஸ் பிரிவில் மிகநீண்ட நாட்களாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண்கள் இருவரை நேற்று முன்தினம் (29) அதிகாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை பகுதியில் பெண்கள் போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.சிவதர்சன் தலைமையிலான பொலிஸ்  குழுவினரால், பிறைந்துரைச்சேனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்விரு பெண்களையும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 360 கிராம் கஞ்சாவும், 30 போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் இருவரும் மிக நீண்ட நாட்களாக போதை வஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கலென்றும், இவர்களிடமிருந்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யும் கஞ்சா பொதிகள் 110 பக்கட்டுக்களும், பொதி செய்வற்கு பயன்படுத்தும் பொலிதீன், மெழுகுதிரி, எடை வைக்கும் தராசு போன்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இரு பெண்களும் சகோதரிகள் என்பதுடன், மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .