2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கட்டார் விபத்தில் மீராவோடை இளைஞன் பலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டார் நாட்டில் சாரதியாகப் பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று (16) அங்கு இடம்பெற்ற விபத்தொன்றில், மீராவோடையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஓட்டமாவடி,  மீராவோடையைச் சேர்ந்த லத்தீப் முஹம்மத் ஹஸான் (வயது 21) என்ற இளைஞரே, விபத்தில் பலியாகியுள்ளாரென, உறவினர்கள் தெரிவித்தனர்.

விபத்துக் குறித்து கட்டார் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை, நல்லடக்கத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக, உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .