2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொரோனாவுக்கு எதிராக 3,500 சுவரொட்டிகள்

Editorial   / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

“நாம் அனைவரும் ஒன்றிணைவோம், கொரோனாவை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிகள், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டு வருகின்றன.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, இலங்கை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள குறித்த சுவரொட்டியில் கொரொனா வைரஸ் பரவல் தொடர்பாகவும், கொரொனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்புப் பெற வேண்டிய விதிமுறைகள் பற்றியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் குறித்த சுவரொட்டிகள் இதுவரை 3,500 ஒட்டப்பட்டுள்ளனவென, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அறிவுறுத்தல்களை அனைவரும் கடைப்பிடித்து நடந்துகொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டிக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .