2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கல்லடியில் முயற்சியாண்மை கண்காட்சி

Editorial   / 2019 மார்ச் 28 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், கே.எல்.ரி.யுதாஜித், க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு,  ''மட்டு. முயற்சியாண்மை – 2019 '' எனும் தொனிப்பொருளில், கண்காட்சியொன்று நடைபெறவுள்ளது.

மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவால் நடத்தப்படும் இக்கண்காட்சி,   மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில், மார்ச் 18, 19 ,20ஆம் திகதிகளில், காலை 10  மணி தொடக்கம் இரவு 10  மணி வரை  நடைபெறவுள்ளது.

மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெறும் இக்கண்காட்சியில், 14  பிரதேச பிரிவுகளிலும் உள்ள உற்பத்தியாளர்களின் தயாரிப்புக் கைவினைப் பொருள்கள் , உணவு உற்பத்திகள், பனையோலை, கைத்தறி உற்பத்திப் பொருள்கள், மட்பாண்ட உற்பத்திகள், சிற்பங்கள், பாதணிகள் எனப் பல்வேறு உற்பத்திப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளனவென, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சியினூடாக, மாவட்டத்தின் சிறிய, நடுத்தர முயற்சியாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் வறிய குடும்பங்களின் பொருளாதாரத்தை விருத்திசெய்யவும் தன்னிறைவான சமூக கட்டமைப்பை உருவாக்குவதற்கும் இதன் பிரதான நோக்கமாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .