2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிழக்கில் வழிநடத்தல் குழு உருவாக்கம்: பிரச்சினைகள் இருப்பின் அறிவிக்கவும்

அப்துல்சலாம் யாசீம்   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரானா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு, மக்களது பிரச்சினைகளைத் தெரிவிக்கவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் அறிவுறுத்தலுக்கமைய, மாகாண வழிநடத்தல் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது என, கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகச் செயலாளர் றுஷிர டிலான் மதுசங்க தெரிவித்தார்.

அதற்கிணங்க, பிரதான முகாமைத்துவ வழிநடத்தல் அலுவலகத்துக்கு தொடர்புகொள்ள வேண்டுமெனில், 026-2222102 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது epgovernormedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாக தொடர்புகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான வழிநடத்தல் இணைப்பதிகாரியாக, உதித்தா ரத்நாயக்கவைத் தொடர்புகொள்ள வேண்டுமாயின், 0716842334 என்ற அலைபேசி இலக்கம் அல்லது  deemathi@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாக தொடர்புகொள்ள முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மாவட்ட ரீதியாகத் தொடர்பு கொள்வதற்கு, 

அம்பாறை- சாமர திலங்க- 0713889000 - chamaratfc83@gmail.com, திருகோணமலை - 0764110153 - Jena.jeynaa@gmail.com, மட்டக்களப்பு - 0773222023 - ஹரி பிரதாப் - harrytrds@gmail.com ஆகியோரைத் தொடர்புகொள்ள முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊடக இணைப்பதிகாரியாக, றுஷிர டிலான் மதுசங்க என்பவரை, 0777773522 என்ற அலைபேசி இலக்கம் அல்லது ruchiradmadushanka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகத் தொடர்புகொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடனடி அழைப்புகளுக்கு, 0716842334 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .