2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காணாமல் போன குடும்பஸ்தர் 4 நாள்களின் பின்னர் சடலமாக மீட்பு

Editorial   / 2019 ஜனவரி 22 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்

காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் 4 நாள்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மகிழூர், கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ந.கோபால் (வயது 42) என்பவருடைய சடலமே, மகிழூர், பெரியகுளத்தில் இருந்து நேற்று (21) மீட்கப்பட்டது.

கடந்த 17ஆம் திகதி வீட்டில் இருந்து இருந்து சென்றவர் திரும்பி வராததால் உறவினர்கள் இவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தபோதே அவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது.

இவர் முதலைக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X