2024 மார்ச் 28, வியாழக்கிழமை

காத்தான்குடி பள்ளிவாசலில் கல்விக் கூடம் அங்குரார்ப்பணம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி, மொஹியித்தீன் தைக்கா பள்ளிவாசலில் கல்விக் கூடமொன்று,  நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

மறைந்த காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபரான ஷைகுல் பலாஹ் அவர்களின் பெயரில், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவால் இந்தக் கல்விக் கூடம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆண் மாணவர்களின்  கல்வியை மேம்படுத்தவும் மாணவர்களின் ஒழுக்கவிழுமியங்கள் பண்பாட்டு விருத்தியை அதிகரிக்கவும் மற்றும் மாலை நேர  சுய கற்றல் வகுப்புகளை ஏற்படுத்தி, அவர்களை கல்வியின்பால் சிந்தனையை ஏற்படுத்தவும் இக்கற்கை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக, பள்ளிவாசலின் செயலாளர் மௌலவி எம்.பி.எம் பாஹிம் பலாஹி தெரிவித்தார்.

கல்விக் கூடத்துக்கான தளபாடங்கள், இராஜாங்க அமைச்சரால் நிர்வாகத்தினரிடம் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதுடன், பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் நினைவுச்சின்னமொன்றும் இராஜாங்க அமைச்சருக்குக் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X