Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2019 மே 02 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து, பாதுகாப்பு கெடிபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், காத்தான்குடி உட்பட அயல் பிரதேசங்களிலும் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காத்தான்குடி முதலாம் குறிச்சி, 19ஆம் வட்டாரம், மஞ்சந்தொடுவாய் பிரதேசங்களில், பொலிஸாரும் இராணுவத்தினரும், வீடு வீடாகச் சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலை 5 மணிமுதல் பிற்பகள் 1 மணி வரை இந்தச் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காத்தான்குடிக்கு அயலுள்ள ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்திலும் சில இடங்களில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன. பாலமுனை அம்மார் ஜும்ஆப்பள்ளிவாயல் முழுமையாக சோதனை செய்யப்பட்டது.
இதேபோன்று சுற்றி வளைப்புப் பிரதேசங்களிலுள்ள பள்ளிவாயல்கள், குர்ஆன் மதரசாக்கள் என்பனவும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
20 Apr 2024