2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காய்ச்சல் காரணமாக சிறுமி மரணம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள காத்தான்குடி 2 இல் வசித்து வந்த ஆறு வயதுச் சிறுமியொருவர், காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக, சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல். நஸுர்தீன் தெரிவித்தார்.

தஜ்வீத் கலாசாலை வீதி காத்தான்குடி 2 ஐச் சேர்ந்த ஸஹ்ரான் முஹம்மத் பாத்திமா சுரைபா என்ற முதலாமாண்டு மாணவியே, இவ்வாறு மரணத்தைத் தழுவியுள்ளார்.

இச்சிறுமி, கடந்த திங்கட்கிழமை தொடக்கம் காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (29) இரவு சிகிச்சை பயனின்றி மரணித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .