2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிணற்றுக்குள் வயோதிபரின் சடலம் மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 மார்ச் 18 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டான்சேனைக் கிராமத்தில், கிணற்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம், நேற்று  (17) மாலை மீட்கப்பட்டுள்ளது.

முறக்கொட்டான்சேனை - மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த, விநாயகமூர்த்தி யோகராசா (வயது 60) என்பவரின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வயோதிபரின் மனைவியின் பற்கள் பிடுங்கப்பட்ட நிலையில், வீட்டில் மயக்கமுற்றுக் கிடந்ததாகவும் வீட்டில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .