2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிராமிய வங்கிகளை விஸ்தரிக்க நடவடிக்கை

பேரின்பராஜா சபேஷ்   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுண்கடன் திட்டத்தால் ஏற்படும் தற்கொலைகள், பாதிப்புகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்குடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேசங்கள் தோறும் வாழ்வாதாரத் தொழில் விஸ்தரிப்பு கடன்களை வழங்கும் திட்டத்துடன், கிராமிய வங்கிகளின் செயற்பாடுகளை விஸ்தரிக்க   நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஏறாவூர், வடக்கு- மேற்கு  பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிராமிய வங்கிக் கிளை, செங்கலடியில் இன்று (05) திறக்கப்பட்டுள்ளது.

பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி  உதவி ஆணையாளர்   கேவி. தங்கவேல் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கூட்டுறவுச்சங்கத் தலைவர் எஸ். சத்தியவரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுமுகாமையாளர் திருமதி எஸ். உதயநாயகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உறுப்பினர்கள், வங்கிக்கணக்குத் திறத்தல், கடன் கொடுப்பனவுகள் வழங்கல் போன்ற நடவடிக்கைகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறாவது கிராமிய வங்கிக்கிளை இதுவாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தனியார் நிறுவனங்களிடமிருந்து நுண்கடன்களைப் பெற்றுக்கொண்ட பொதுமக்கள் பலர், அக்கடன்களைச் செலுத்தமுடியாது தற்கொலை செய்துகொண்டனர்.

இந்தப்  பரிதாப நிலையைக் கருத்திற்கொண்டு, கிராமிய வங்கிகள் மூலமாக வாழ்வாதாரத் தொழில்களுக்கான கடன்களை புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் இலகுவான விதிமுறைகளின் கீழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .