2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கிறிஸ்மஸ் மரம் திறந்துவைப்பு...

Editorial   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, புனித லூர்து மாதா தேவாலயத்தில், 42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம், அருட்தந்தை லோறன்ஸ் நிக்லஸ் அடிகளாரால், விசேட ஆராதனையுடன், ஒளியூட்டப்பட்டு நேற்று (08) திறந்துவைக்கப்பட்டது.

லூர்து அன்னை ஆலயத்தின் பங்குமக்கள், இளைஞர்களின் முயற்சியால், முழுவதும் மின்குமிழ்களால் இந்த கிறிஸ்மஸ் மரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

யேசு கிறிஸ்துவின் பிறப்பைச் சிறப்பிக்கும் வகையில் மூன்றாவது ஆண்டாகவும் இந்த மரம் அமைக்கப்பட்டு, திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்த மரத்தைப் பார்வையிட, பெரும் எண்ணிக்கையிலானோர் வருகைதந்த வண்ணமுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .