2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண வர்த்தக தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப சம்மேளனம் அங்குரார்ப்பணம்

Editorial   / 2018 மார்ச் 13 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக கிழக்கு மாகாண வர்த்தக தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப சம்மேளனமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அறிமுக வைபவம், மட்டக்களப்பு ஓசியனிக் ஹோட்டலில் இன்று (13) நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தக தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப சம்மேளனங்களை ஒன்று சேர்த்து, மாகாண மட்டத்தில் இந்தச் சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது.

கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் அனுசரணையுடன் இளைஞர், யுவதிகளுக்கு டிஜிட்டல் புதிய தொழிநுட்பத்தினூடாக சிறந்த பயிற்சிகளை வழங்கி, அவர்களை தொழில் ரீதியாக வழிகாட்டும் வகையிலேயே, இந்த வர்த்தக தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் தலைவர் அன்வர் முஸ்தபா தலைமையில் நடை பெற்ற ஆரம்ப வைபவத்தில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.குணநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாடசாலையை விட்டும் இடை விலகும் மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகளுக்கு புதிய தொழிநுட்பத்தினூடாக தொழிற்பயிற்சிகளை வழங்கி, அவர்களை தொழில் வழங்குநர்களோடு இணைத்து விடவும் இந்தச் சம்மேளனம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .