2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சட்ட விரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரக்குற்றிகள் மீட்பு

பேரின்பராஜா சபேஷ்   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, தொப்பிகல காட்டில், சட்டவிரோதமாக வெட்டி, நுட்பமான முறையில் சைக்கிள்களில் கடத்தப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை, ஏறாவூர்ப் பொலிஸார் நேற்று (17) மாலை கைப்பற்றினர்.

உடலில் எண்ணெய் பூசிய நிலையில் சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டு வந்த நபர்கள் ஆறு பேரும், சைக்கிள்களைக் கைவிட்டு, பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பியோடிவிட்டனரெனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆறு சைக்கிள்களில், சுமார் ஆறு அடி நீளமுடைய 26 மரக்குற்றிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

கைவிட்டுச் செல்லப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு, சந்தேகநபர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .