2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சத்தமின்றி நகர்த்தும் கொள்ளைக் கோஷ்டி ; 4 ஓட்டோக்கள், 2 மோட்டார் சைக்கிள் மாயம்

Editorial   / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன்

 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில், இந்த ஆண்டில் மொத்தமாக, 4 ஓட்டோக்களும் இரு மோட்டார் சைக்கிள்களும், சத்தமின்றி நகர்த்தும் கொள்ளைக் கோஷ்டியினால் களவாடப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இது விடயமான விசாரணைகள், முழுமையாக முன்னெடுக்கப்பட்டு இருப்பதாகவும், பொலிஸார் கூறினர்.

கடந்த ஒரு வருட காலத்தில் மாயமான ஓட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள், அதுபற்றி பொலிஸாருக்கு அறியத்தருமாறு, வாழைச்சேனை கோரியுள்ளனர்.

பிரதேசத்திலுள்ள வீதிகளைக் கண்காணிக்கும் வகையில் கடைகளிலும் வீடுகளிலும் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கமெராக்களில்; பதிவாகியிருக்கும் காட்சிகளின் உதவி நாடப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் புலனாய்வுப் பிரிவு சிரேஷ்ட பொறுப்பதிகாரி ஈசாலெப்பை பதூர்தீன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .