2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘சபாநாயகரே காரணம்’

வா.கிருஸ்ணா   / 2018 நவம்பர் 19 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலைக்கு, சபாநாயகரின் செயற்பாடே முழுக்காரணம் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நாடளுமன்ற செயற்பாடுகளில் சபாநாயகர் சட்டவிரோதமாக செயற்படுவதுடன், பக்கச்சார்புடன் நடந்துகொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

காத்தான்குடியில் நேற்று (18) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, இந்தக் குற்றச்சாட்டை அவர் சுமத்தினார்.

தனது 30 வருடகால அரசியலில் பல சபாநாயகர்களை பல்வேறு மோசமான சூழ்நிலையிலும் சந்தித்துள்ளதாகவும் அவர்கள் யாரும் ஒரு பக்கச்சார்பாக நடந்துகொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையை நிரகாரிப்பதற்கு சபாநாயகருக்கு அதிகாரமில்லையெனவும் ஹிஸ்புல்லாஹ் எம்.பி இதன்போது சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .