2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சமாதான நீதிவான்களுக்கான ‘கிழக்கு மாகாண மாநாடு’

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவை ஒழுங்கு செய்துள்ள கிழக்கு மாகாணத்துக்கான மாநாடு, அட்டாளைச்சேனை, மீனோடைக்கட்டு சக்தி கூட்ட மண்டபத்தில், ஒக்டோபர் 12ஆம் திகதி சனிக்கிழமை மாலை 03 மணிக்கு நடைபெறவுள்ளது.

பேரவையின் தேசிய பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டின்போது, துறைசார் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது நாட்டில் உள்ள நீதிவான்களின் நன்மை கருதி பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

'சுபீட்சமான இலங்கை' எனும் தொனிப்பொருளின் கீழ், கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் இம்மாநாடு, எதிர்வரும் காலங்களில் நாட்டின் ஏனைய மாகாணங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இம்மாநாட்டில்அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட சமாதான நீதிவான்களும் முழுத்தீவுக்குமான சமாதான நீதிவான்களும் கலந்துகொள்ள முடியும்.

இதில்  பங்குபற்ற விரும்பும் சமாதான நீதிவான்கள் 077 8614 444 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X