2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிறுபோகச் செய்கை ஆரம்பம்

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான் 

ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில்,  விவசாய நடவடிக்கையில்  எவ்விதத் தடையுமின்றி விவசாயிகள் ஈடுபட  முடியும் என்ற அரசாங்கத்தின் அனுமதிக்கு அமைய, விவசாயிகள் இவ்வாண்டுக்கான சிறுபோகச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெருவெட்டை, மூக்கற்ற கல், ஜப்பார் திடல், தரைசேனை, வாகனேரி, வகுலாவலை ஆகிய பகுதிகளில் விதைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்ற பாதுகாப்புப் படையினர்களுக்கு, விவசாயிகள் நன்றிகளைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .