2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சிறுவனின் சடலம் மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 மே 21 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் மூங்கிலாற்றின் மூங்கில்களுக்கிடையில் சிக்குண்டு மரணித்த நிலையில், சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டூர் கணேசபுரத்தைச் சேர்ந்த உமாபதி கிஷான் (வயது 15) என்ற இச்சிறுவன், நேற்று (20), தனது நண்பர்கள் சிலருடன் மூங்கிலாற்றில் நீராடிக் கொண்டிருந்தபோதே, நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து, ஆற்றுப் பகுதியெங்கும் கிராம மக்கள் தேடுதலை மேற்கொண்டபோது, சிறுவனின் சடலம், ஆற்றுக் கரையில் மூங்கில்களுக்கிடையில் சிக்குண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் ​விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .