2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறுவர், முதியோர் தின நிகழ்வு

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ.சுதாகரன்

மண்முனை, தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள சிறுவர், முதியோர் தின நிகழ்வு, பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில், துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில், நாளை (01) பிற்பகல் 02 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தும் சிறப்பு அதிதிகளாக களுவாஞ்சிகுடி பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி  எஸ்.கிருஸ்ணகுமார், மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் செயலாளர் க.லெட்சுமிகாந்தன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஜீ.யு.ஐ.குணவர்த்தன, களுவாஞ்சிகுடி நன்னடத்தை அலுவலக பொறுப்பதிகாரி ஜனாப் எம்.என்.எம்.றபாஸ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .