Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2018 நவம்பர் 26 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, ஆரையம்பதியில் சிறைச்சாலை உத்தியோகத்தரின் வீட்டை உடைத்து, நகைகள், அலைபேசிகள், ஒலிபெருக்கி சாதனங்கள் உட்பட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக தந்தை, மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனரென, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.
நேற்று (25) மாலை கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர் தெரிவித்தார்.
சந்தேகநபர்களிடமிருந்து தாலிக்கொடி உட்பட 9 பவுண் நகைகள், அலைபேசிகள் 02, ஒலிபெருக்கி சாதனங்கள் 02 உட்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago