2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சு.க ஆதரவாளர்களை, ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார்’

பேரின்பராஜா சபேஷ்   / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றிவிட்டாரென, அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தொகுதி அமைப்பாளர் எம்.எஸ். சுபைர் குற்றஞ்சாட்டினார்.

பொலன்னறுவை மாவட்டத்தைச் சொர்க்கபுரியாக மாற்றுகின்ற ஜனாதிபதி, மட்டக்களப்பு மாவட்டத்தில்  அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கென,   ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிதிநிதிகளுக்கு இதுவரை ஐந்து சதத்தையேனும் வழங்கவில்லையென்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று செயலகப் பிரிவிலுள்ள வடிச்சல் பிரதேசத்தில், 50 இலட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளை                   மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று (16)  நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே,  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஜனாதிபதி வருகை தந்திருந்த போது, இந்த மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக, பல மில்லியன் ரூபாய் நிதியை, தமது மக்கள் பிரதிநிதிகளிடம் வழங்குவதாக சூழுரைத்திருந்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருந்தபோதிலும், ஜனாதிபதி அவ்வாறு நிதி வழங்காதிருப்பது, அதிர்ச்சியையும் கவலையையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகவும், சுபைர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .