2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுற்றுலாப் பணிப்பாளர் நாயகம் நியமனம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகமாக ஏ.எஸ்.எம்.பாயிஸ், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவால் இன்று (07) நியமிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாணம் மற்றைய மாகாணங்களை விடவும் சுற்றுலாத்துறையில் அபிவிருத்தி அடைய வேண்டுமெனவும், கிழக்கில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்து, மக்களின் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டுமெனவும், சுற்றுலாத்துறையின் மூலம் இனங்களுக்கிடையில் இன ஒற்றுமையைக் கட்டியெமுப்ப வேண்டுமெனவும், அவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்ளுவார் என்ற நம்பிக்கையில் இந்நியமனம் வழங்கப்படுகிறதெனவும், ஆளுநர் தெரிவித்தார்.

இவர், தற்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளராகவும் வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளராகவும் கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .