2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சுவரொட்டிகளில் சபாநாயகருக்கு வாழ்த்து

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வாழ்த்துத் தெரிவித்து,  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

“எமக்குப் பெருமை - நாட்டுக்குப் பெருமிதம்” என்ற வாசகம் இந்த சுவரொட்டிகளில் காணப்படுகின்றது.

நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், அதிகாரங்கள் மற்றும் மக்களின் அபிலாஷைகளைத் துணிகரமாக நின்று பாதுகாத்ததுடன் , நாட்டின் ஜனநாயகத்தை நிலை நிறுத்த அச்சமின்றி வீரத்துடன் கடமையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு, நாட்டு மக்களின் ஆசிர்வாதங்கள் எனவும், இந்த  சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X