2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சைட்டத்தை தடைசெய்யுமாறு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஜனவரி 10 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபே சைட்டம் தனியார் மருத்துகக் கல்லூரியின் பெயரை மாற்றி பதிவு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்து, சைட்டத்தை உடனடியாக மூடிவிட வேண்டுமெனக் கோரி, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், இன்று (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் தமது கோரிக்கைகளடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் விடுதி பகுதியிலிருந்து புறப்பட்டு  ஊர்வலமாக வந்து, பிரதான வீதியோரம் நின்று, தமது கோஷங்களை எழுப்பினர்.

இதன்போது மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“மருத்துவப் படிப்பபை பணத்துக்கு விற்பனை செய்தால், பணம் படைத்தவர்களுக்கு வழங்கும் சலுகையாகவே அமையும். ஏழைகளைக் காப்பற்றுவதற்கும் எமது பெற்றோர், மாணவர்களைக்  காப்பாற்றுவதற்கும் சைட்டத்தை உடனடியாக தடை செய்யுங்கள்” என்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X