2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டெங்குக் காய்ச்சல் காரணமாக சிறுவன் மரணம்

Editorial   / 2018 ஜனவரி 14 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

டெங்குக் காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயதுச் சிறுவன் நேற்று (13) பிற்பகல் மரணமடைந்துள்ளதாக, வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

ஏறாவூர், மிச்நகர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (இல்மா வித்தியாலயம்) 7ஆம் ஆண்டில் கற்கும்  என்.எம்.எம்.முஆத்  (வயது 12) என்ற சிறுவனே,  இவ்வாறு டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளாகி மரணித்துள்ளார்.

இவர், ஏறாவூர் அல்முனீறா பெண்கள் உயர் தரப் பாடசாலை அதிபர் என்.எம். மஹாத் என்பரின் புதல்வராவார்.

சிறுவன், காய்ச்சல் காரணமாக கடந்த சில தினங்களாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலேயே, சிகிச்சை பயனின்றி மரணித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .