2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

த.தே.கூ. வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்

வா.கிருஸ்ணா   / 2018 ஜனவரி 08 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகரசபைக்குப் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் அலுவலகம் மீது, நேற்று (07) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 03ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் கந்தசாமி ரகுநாதன் என்பவரின் கொக்குவிலில் உள்ள தேர்தல் அலுவலகம் மீதே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாகை சேதமாக்கப்பட்டுள்ளதுடன், கட்சியின் கொடியும் எரிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .