Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
வா.கிருஸ்ணா / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் மத்திய அரசின் அடிவருடிகளாக தமிழர்களை பலவீனப்படுத்துவதற்காக எடுக்கப்படுகின்ற முயற்சிகளை, எதிர்காலத்தில் தமிழ்த் தலைமைகள் முறியடிக்க வேண்டுமென, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இவ்வாண்டு 6ஆம் மாதத்துக்குப் பின்னர், கிழக்கு மாகாணத்தில் விகிதாசார நெருக்கடி ஏற்படப்போகின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாதென்றார்.
அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைப் பொறுத்தவரையில், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியனவற்றில் தமிழர்கள் பலவீனமடைந்துவிடுவார்களா என்ற சந்தேகங்கள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 hours ago
9 hours ago
9 hours ago