2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தலைவரானார் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழுவைத் தெரிவு செய்வதற்கான கூட்டம், காத்தான்குடி அல்மனார் அல் ராஸித் மண்டபத்தில் நேற்று (01) மாலை நடைபெற்றது.

இதன்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், செயலாளராக எம்.ஏ.சி.ஹம்தூன், பொருளாளராக எம்.எச்.எம்.உவைஸ், ஐந்து உப செயலாளர்கள், ஐந்து உப தலைவர்கள் உட்பட 14 பேர் கொண்ட நிர்வாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பியசல ஜேயவர்த்தன, காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .