2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தாயைப் பார்க்க வந்த இளம் தாய் சடலமாக மீட்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பதுளையிலிருந்து மட்டக்களப்புக்குத் தனது தாயைப் பார்க்க வந்த இரு பிள்ளைகளின் தாயான 25 வயதுப் பெண்ணொருவர், இன்று (18) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம், மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறையில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்த பிரகாஸ் லபோஜினி என்ற இந்த இளம் தாய், தனது கணவருடன் பதுளையில் வாழ்ந்து வந்த நிலையில், மட்டக்களப்பில் வசிக்கும் தனது தாயைப் பார்க்க நேற்று (17) வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து, மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸார், மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .