2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

துருப்பிடித்த துப்பாக்கி மீட்பு

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி, அன்வர் பள்ளிவாசல் வீதியிலுள்ள வெற்றுக் காணியொன்றிலிருந்து துருப்பிடித்த துப்பாக்கியொன்றின் முன்பகுதி, நேற்று (29) மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கை மேற்கொண்டிருந்த போது இதனைக் கண்டு, மீட்டுள்ளனர்.

இதனையடுத்து, இராணுவ அதிகாரிகளும் பொலிஸாரும் ஸ்தலத்துக்குச்  சென்று காணி உரிமையாளரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .