2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தேக்குக் குற்றிகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜூன் 27 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

தொப்பிகலப் பகுதியை அண்மித்த அரச வனப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்குமரக் குற்றிகள் 67ஐ இன்று காலை வன இலாகா புல்லுமலை வட்டார அதிகாரிகள் கைப்பற்றியதுடன்,  உழவு இயந்திரச் சாரதியொருவரையும் நேற்றுக் காலை கைதுசெய்துள்ளனர்.

சுமார்  இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் 3 உழவு இயந்திரங்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளன என, வன இலாகா புல்லுமலை வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.  

ஏனைய 2 உழவு இயந்திரங்களின் சாரதி தப்பியோடியுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் கூறினர்.  

மரக்குற்றிகளுடன் உழவு இயந்திரங்கள் புல்லுமலை வட்டார வன இலாக காரியாலயத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X