2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

தேரர் தேர்தல் களத்தில் குதிக்க தீவிர முயற்சி?

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 13 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, பௌத்த மடாலயமொன்றைப்   பிரதிநித்துவப்படுத்தும் சர்ச்சைக்குரிய பௌத்த தேரர் ஒருவர், எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பந்தப்பட்ட இந்தத் தேரர், பல்வேறு சந்தர்ப்பங்களில், சிறுபான்மையினங்களை இழிவுபடுத்தும் ஆக்ரோஷ‪ செயற்பாடுகளிலும் சிறுபான்மை இன அரச அதிகாரிகளை இழிவுபடுத்திக் கருத்து வெளிடுவதில் மட்டுமல்லாமல் பொலிஸாரோடு முரண்படுவதிலும் கடந்த காலங்களில் தீவிரமாக ஈடுபட்டுவந்தவர் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்தச் சர்ச்சைக்குரிய தேரர், பெரும்பாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கே தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .