2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேர்தலில் பங்குபற்றும் பெண் வேட்பாளர்களுக்கு செயலமர்வு

வா.கிருஸ்ணா   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பங்குபற்றும் பெண் வேட்பாளர்களுக்கான செயலமர்வு, மட்டக்களப்பு கூட்டுறவு நிலைய மண்டபத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.

மார்ச் 12 இயக்கத்தின் இணைப்புடன், நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பின் அனுசரனையுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணையத்தின் ஏற்பாட்டில், இச்செயலமர்வு நடைபெற்றது.

“தூய அரசியலுக்காக ஒன்றிணைவோம்” என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட இந்த செயலமர்வு, மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியமான இணையத்தின் தலைவரும் மார்ச் 12 இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டுக்குழுவின் தலைவருமான ச.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை உதவு மையத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் ஏ.சொர்ணலிங்கம்,சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அன்பழகன் குரூஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

உள்ளூராட்சிமன்றக் கட்டமைப்பு, அதன் சட்டதிட்டங்கள், உள்ளூராட்சிமன்றத்தின் மூலம் மக்களுக்கு ஆற்றக்கூடிய பணிகள் குறித்து வளவாளர்களால் கருத்துரைகள் இங்கு வழங்கப்பட்டன.

பெண்களின் அரசியல் செயற்பாட்டை ஊக்கப்படுத்தவும் அவர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் ஒன்பதுபேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டதுடன், அதில் இணைய விரும்புவர்களை இணைந்துகொள்ளுமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், எதிர்காலத்தில் பெண்கள் அரசியலுக்குள் வருவதை ஊக்கப்படுத்தவும் அரசியலில் உள்ள பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவர்களுக்கான தீர்வைப்பெற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .