2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நஞ்சற்ற உணவுக் கண்காட்சி

பேரின்பராஜா சபேஷ்   / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நஞ்சற்ற முறையில் உற்பத்திசெய்யப்பட்ட உணவுப் பண்டங்களை உண்ணவேண்டியதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு அறிவூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட உணவுப் பொருட் கண்காட்சி, மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் நேற்று (22) நடைபெற்றது. 

கிரான் பிரதேச செயலாளர் சுந்தரமூர்த்தி ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியைப் பார்வையிட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருகை தந்திருந்தனர்.

காளான், காய்கறிகள், தானிய வகைகள், இலை வகைகள், தீன்பண்டங்கள்  இங்கு காட்சிப்படுத்தப்பட்டதுடன் நியாய விலையில் விற்பனையும் செய்யப்பட்டன.

இரசாயன மருந்து வகைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளால் மக்களுக்கு அதிகம் தொற்றாத நோய்கள் ஏற்படுவதாக  இங்கு எடுத்துக்கூறப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X