2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நல்லிணக்க அபிவிருத்தியில் பிரதமர் மும்முரம்

Editorial   / 2019 மார்ச் 03 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லிணக்க அபிவிருத்தியைக் கையிலெடுத்து மேற்கொண்டுவருகின்றாரென, ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாகீர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் ஆரம்ப கைத்தொழில்களை மேம்படுத்தி, அதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகள், ஆரம்பக் கைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் காணப்படும் வளங்களைக்கொண்டு, தொழில் முயற்சிகளில் ஈடுபடுவோரை ஊக்குவித்து, அவர்கள் மூலம் ஏற்றுமதிகளை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகள் இதன்மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக்கூட்டம், மாவட்டச் செயலகத்தில், நேற்று (02) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், விவசாயம், மீன்பிடி, கால்நடை, மூலிகைச் செடி வளர்ப்பு, பழவகைகள்,மரக்கறி செய்கை, குளிர்பானங்கள் என பல்வேறுபட்ட உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு மேலும் உதவிகளையும் நவீன தொழில்நுட்ப வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உலக வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், தெரிவுசெய்யப்படும் பயனாளிகளுக்கு மானியம் அடிப்படையிலும் கடன் அடிப்படையிலும் உதவிகள் வழங்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .