Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 நவம்பர் 19 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
விலங்கறுமனையைச் சூழவுள்ள குடியிருப்பாளர்களுக்கும் சூழலுக்கும் பாதிப்பில்லாத வகையில், நவீன விலங்கறுமனை (மாடறுக்கும் மடுவம்) அமைக்கப்படுமென, ஏறாவூர் நகர சபை மேயர் இறம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.
ஏறாவூர், ஐயன்கேணிப் பகுதியில் தற்போதைய விலங்கறுமனை அமைந்துள்ள சூழலையும் அங்கு சமீபத்திய அடை மழை வெள்ளத்தால் குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் நேற்று (18) நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின்னர், பிரதேச மக்களிடம் அவர் இந்த வாக்குறுதியை அளித்தார்.
அங்கு மக்களிடம் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மேயர், தற்போது அதிகரித்துவரும் மக்கள் குடியேற்றம், இட நெருக்கடி, மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் என்பவற்றை கருத்தில்கொண்டு, நிலையான ஓர் இடத்தில் நவீன வசதிகளுடனான விலங்கறுமனை அமைக்கப்படவேண்டும் என்ற நோக்கில், ஒரு துண்டுக் காணியை நகர சபை கொள்வனவு செய்வது என்ற தீர்மானம் சபை உறுப்பினர்களின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago