2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நிலுவையிலுள்ள நீர் விநியோகங்கள் துண்டிக்கப்படும்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 நவம்பர் 29 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி, நகரசபை பிரிவில் மூன்று மாதங்களைக் கடந்தும் நிலுவைகளைச் செலுத்தாத அனைத்து வாடிக்கையாளர்களுடைய நீர்விநியோகங்களும் டிசெம்பர் மாதம் 31 ஆம் திதியுடன் துண்டிக்கப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் காத்தான்குடி நிலையப் பொறுப்பதிகாரி பசால் முஹமட் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேசத்தில் 10,841 நீர் விநியோக இணைப்புக்கள் செயற்படுகின்றன. இவற்றுள், அதிகமான பாவனைளாளர்கள், சுமார் மூன்று மாதங்களைத் தாண்டியும் நிலுவைகளைச் செலுத்தத் தவறியுள்ளனர்.

இதனால் காத்தான்குடி நிலையத்தில் சுமார் 10 மில்லியன் ரூபாய் நிலுவையாகவுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.

இதனை கருத்திற்கொண்டு, புதிய ஆண்டில் நிலுவைகளைச் செலுத்தாத அனைத்து இணைப்புகளையும் துண்டிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .