2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நீரில் மூழ்கி இளைஞன் பலி

Editorial   / 2018 மே 26 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, சந்திவெளி ஆற்றில் வெள்ளிக்கிழமை (25) இரவு தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சந்திவெளி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த யோகராசா ரரிஷன் (வயது 21) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 திகிலிவட்டை கிராமத்தில் நண்பரின் மரண வீட்டுக்கு செல்வதற்காக தனது இரு நண்பர்கள் சகிதம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தோணியில் சந்திவெளி ஆற்றினை கடக்க முற்பட்ட வேளையில் தோணி கவிழ்ந்துள்ளது.

இதன்போது, குறித்த இளைஞன் உயிரிழந்ததுடன் ஏனைய இருவரும் உயிர் தப்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X